×

முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு

ரிஷிவந்தியம், ஜன. 22: ரிஷிவந்தியம் அடுத்த பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (40). இவருக்கும், அவரது அண்ணன் கொளஞ்சி (55) என்பவருக்கும் வீடு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள கூரையை சரி செய்யும் பணியில் கொளஞ்சி ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஏழுமலை, நாராயணன் ஆகிய இருவரும் வீட்டின் கூரையை ஏன் இப்போது சரி செய்கிறாய் என்று கேட்டு வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் அதிகமானதால் கோபம் அடைந்த கொளஞ்சி அருகில் இருந்த கத்தியை எடுத்து நாராயணனை   வெட்டியுள்ளார்.
இதில் நாராயணனின் கை விரல் துண்டானது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த
புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...