×

நாளைய மின்தடை

புதுச்சேரி,  ஜன. 22:  கண்டமங்கலம் கோட்டம் வானூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் முக்கியமான சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வானூர், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் நாளை (23ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் செயற்பொறியாளர் (பொறுப்பு) தங்கமாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...