×

குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்-1 பிரிவில் காலியாக உள்ள 139 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சியால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2019 ஆகும். இதற்கான தேர்வு 03.03.2019 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பயனடையும் வகையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 28.01.2019 முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது சிறந்த பாடப்பிரிவு வல்லுநர்களையும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று தற்போது அரசுப் பணியில் உள்ளவர்களை கொண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்படும்.இத்தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் 28.01.2019 அன்று கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Exam Writer ,Training Course for Group 1 ,
× RELATED சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்...