×

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் வருகிற 25.01.2019 அன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
இக்குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,collector ,office ,Cuddalore ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...