×

சாலை விரிவாக்க பணி நஷ்டஈடு வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முஷ்ணம், ஜன. 22: விக்கிரவாண்டி- தஞ்சை சாலை விரிவாக்க பணிக்கு முஷ்ணம் அருகே சோழத்தரம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளை சேர்ந்த 11 நபர்களின் இடத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். ஆனால் இவர்களுக்கு இதுவரை முறையான நஷ்டஈடு வழங்கப்படாமல் உள்ளது. இதில் காமராஜ் என்பவரது இரண்டரை சென்ட் இடத்திற்கு இதுவரை ஒரு சென்ட் அளவுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.இதனால் அதிருப்தியடைந்த அவர் மற்றும் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினர் சோழத்தரத்தில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். எனவே உரிய நிவாரணம் வழங்காத அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி சோழத்தரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சக்கரபாணி தலைமை தாங்கினார். காமராஜ், காசிநாதன், சங்கர், வெற்றிவீரன், செந்தில், செல்லப்பன், அர்ச்சுனன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...