×

வாலிபரை தாக்கியவர் கைது

விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தேவர்மணி (24) என்பவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தேவேந்திரனின் நெருங்கிய உறவினரான இலக்கியா என்பவரை தேவர்மணி தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தேவர்மணியிடம் கேட்டபோது, தேவர்மணி, அவரது சகோதரர் சின்னமணி ஆகிய இருவரும் தேவேந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தேவர்மணி மற்றும் சின்னமணி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து தேவர்மணியை கைது செய்தனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...