×

திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் 3 பேர் பயணம் 100 பேர் மீது போலீசார் நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி,ஜன. 22: திருத்துறைப்பூண்டியில் டூவீலரில்  3 பேர் பயணம் செய்த வழக்கில் 100 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனங்கள் ஓட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் 3 பேர், 4  பேர் செல்வது தான் அதிகமாக உள்ளது. இதனை யாரும் கண்டுகொள்ளாததால் அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி துரை உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், எஸ்ஐ வல்லவராணி ஆகியோர் தனித்தனியாக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்ற வழக்கில் 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடரும் என்று டிஎஸ்பி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


Tags : Police action ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...