×

மேட்டுப்பாளையம், குன்னூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.22: திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைகூட்டங்கள்நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையம், குன்னூர் ஆகிய ஊராட்சிகளில்  திமுகஊராட்சி சபைகூட்டம் நடைபெற்றது. திமுகதலைமக்கழகபிரதிநிதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் கலந்து கொண்டார்.ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி சபைகூட்டங்களில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள்பகுதியில் உள்ள குறைகளை எம்எல்ஏஆடலரசனிடம் கூறினார். இதில் பெரும்பாலான குறைகள் கஜா புயல் நிவாரணம் குறித்தே இருந்தது குறிப்பிடத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு போதுமான நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் மாடி வீடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு நிவாரண உதவிகள் தரப்படவில்லை என்று கூறி உடனடியாக அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து திமுகஎம்.எல்.ஏ. ஆடலரசன் கூறியதாவது:அரசு கஜா புயல் கணக்கெடுப்பைசரிவர மேற்கொள்ளவில்லை எனவும் கிராம நிர்வாக அதிகாரிகள்  கிராமங்களுக்கே வருவதில்லை. அதனால் பொது மக்கள்அவர்களின் குறைகளை யாரிடமும்  சொல்லி முறையிடமுடியாமல் தவிக்கின்றனர்  எனவும் கூறினார்.

Tags : DMK Panchayat Council Meeting ,Mettupalayam ,Coonoor ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது