×

நாகை புது பஸ் நிலையத்தில் உணவு தொடர்பான விழிப்புணர்வு முகாம்

நாகை, ஜன.22: நாகை மாவட்ட  உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு தொடர்பான விழிப்புணர்வு முகாம்  கண்காட்சி நாகை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் முகாம் மற்றம் கண்காட்சி தொடக்க விழாவிற்கு  நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  செல்வராஜ் தலைமை வகித்தார்.  நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன்  வரவேற்றார். முகாம் மற்றும் கண்காட்சியை  நாகை சப்-கலெக்டர் கமல்கிஷோர் தொடங்கி வைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நாக வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த ரமேஷ், ஊர்க்காவல் படை நாகை மாவட்ட தளபதி ஆனந்த்,  தமிழநாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர்  ராணி, வட்ட செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Food-awareness camp ,Bus Station ,Nagapattinam New ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்