×

அரசு சார் கல்வி நிறுவன பேராசிரியர்கள் போராட்டம்

காரைக்கால், ஜன.22: காரைக்கால் மாவட்ட அரசு சார் கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஊழியர்கள், எழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி, நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.காரைக்கால் மாவட்ட புதுச்சேரி அரசு சார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 6வது ஊதியக் குழுவின் நிலுவை அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கால வரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி, 2 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : State ,institution ,professors ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...