×

தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜன.22: தென்காசியில் பொருளாதார அடிப்படையில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குற்றாலகுமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் மாரியப்பன், ஒனறிய செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார், தென்மண்டல துணை செயலாளர் தமிழரசு, மாநில செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், தமிழ்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங், சந்திரன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜ், தமிழ்குமரன், முருகன், சேகுவேரா, இளஞ்சூரியன், குமார், கரும்புலி குயிலி பேரவை தமிழ்செல்வி, மாடத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamils Demonstration ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது