×

ராதாபுரத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி

ராதாபுரம்,ஜன.22:  ராதாபுரத்தில் திமுக மற்றும் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலை அமைப்புக்குழு சார்பில் 10ம் ஆண்டு பொங்கல் விழா காமராஜர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் திருஉருவச்சிலை முன்பாக 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தலைமையில் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 101 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
நிகழ்ச்சிக்கு ராதாபுரம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி முன்னிலை வகித்தனர். ராதாபுரம் ஊராட்சி கழக செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

மாவட்ட துணைசெயலாளர் சித்திக், களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன் வாழ்த்திபேசினார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் கல்கண்டு, மாவட்ட இலககிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் முருகன், தனபால், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி வேலப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சங்கர், பணகுடி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கோபிகோபால கண்ணன், கஸ்தூரிரெங்கபுரம் பாலன், விஜயாபதி சிவா, ஐயப்பன், ராதாபுரம் கிறிஸ்டோபர், டேவிட், அகஸ்டின், கலைவாணி முருகன், மீரான், டவர் கணேசன், வட்டவிளை முருகன், குகன், அசோக் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Radhapuram ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...