×

செல்போன் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடியில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார்  கைது செய்தனர்.   தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த மர்ம நபர் , அசோக்
குமாரின் செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்சென்றார்.  இதையறிந்த அசோக்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்நபரை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் திருடியவர்,  தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், பிரதீப்குமாரை கைது செய்து செல்போனை மீட்டனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்