க.பரமத்தி,ஜன.22: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே வாரத்தில் தேங்காய் விலை கிலோ ரூ.3உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். கரூர் மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் விடப் படுகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு 156மூட்டைகளை ஏலம் விடப்பட்டது. அதில் கொப்பரை தேங்காய் குறைந்த பட்சமாக கிலோ ரூ.116க்கு அதிக பட்சமாக கிலோ ரூ.123க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ.1 அதிகமாக ஏலம் போனது.இதே போல 4967 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. அதில் தேங்காய் சராசரி யாக ஒரு கிலோ ரூ.31க்கும், அதிக பட்சமாக ரூ.39க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.3அதிகமாக ஏலம் போனது.