×

கிறிஸ்தியாநகரம் ஆலய விழாவில் பட்டிமன்றம்

உடன்குடி, ஜன. 22: உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 171வது  பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகையையொட்டி சிறப்பு பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்  நடந்தன.  உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய 171வது  பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கடந்த 18ம் தேதி துவங்கியது. இதையொட்டி விழா நாட்களில்  தினமும் ஆசீர்வாத கூட்டம், கீத ஆராதனை, வேதாகம நாடகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

நேற்று முன்தினம் (20ம் தேதி) வேதாகமத்தில் குடும்பத்தை நல்வழிப்படுத்தியவர்கள்  கணவனா? மனைவியா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. ஆலய பரிபாலகர் ஞானராஜ்  கோயில்பிள்ளை தலைமை வகித்தார். சேகர குரு செல்வன்மகாராஜா முன்னிலை  வகித்தார். நடுவராக உதவி சேகரகுரு ஜான்சாமுவேல் செயல்பட்டார். ஆண்கள்  அணியில் பாலசிங், சிங்காரபாண்டி, ஜான்சன் உள்ளிட்டோரும், பெண்கள் அணியில்  சுவீட்டி பெவிஸ், பேபிஷானி, ஜெரின்பெல் ஆகியோரும்  பேசினர். அசன குழு தலைவர்  பால்ராஜ், செயலர் பிரின்ஸ், பொருளாளர் ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Tags : Christianity Temple Festival ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு