×

காவல்கிணறு அருகே கார்- டெம்போ மோதல் குமரி டாக்டர் பலி

பணகுடி, ஜன. 22: பணகுடி காவல்கிணறு அருகே கார் மீது டெம்போ மோதியதில் குமரி டாக்டர் பலியானார்.நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஞான நிக்கேஷ் ஜட்சன் (43). டாக்டரான இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான வள்ளியூரில் ரெடிமேட் கடை நடத்தி வந்தனர். டாக்டர் ஜட்சன் நாகர்கோவில் மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு தினமும் மாலை வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு வருவது வழக்கம்.நேற்று சுங்கான்கடையிலிருந்து வழக்கம் போல் காரில் வந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த நில புரோக்கர் தர்மராஜ் மகன் மதன் என்பவரும் காரில் காவல்கிணறு வந்தார். நான்கு வழிச்சாலை தினசரி சந்தை அருகே சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தி விட்டு காரில் அமர்ந்து ஞான நிக்கேஷ் ஜட்சனும், மதனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டெம்போ திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே டாக்டர் ஜட்சன் பலியானார். மதன் படுகாயங்களுடன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெம்போ டிரைவர் தப்பியோடி விட்டார்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : doctor ,Kumari ,kavalkinar ,car-tempo clash ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!