×

கலசபாக்கம், செங்கம், பெரணமல்லூர் பகுதியில் 8 வழிச்சாலையை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்

கலசபாக்கம், ஜன.22: கலசபாக்கம், செங்கம், பெரணமல்லூர் பகுதியில் 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள தென்பள்ளிப்பட்டு, பில்லூர், காம்பட்டு, பத்தியவாடி, பால்நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நிலங்களை அளந்து குறியீட்டு கற்கள் நடப்பட்டன.

இந்நிலையில், விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், ‘வாக்களிக்க மாட்டோம்’ 8 வழிச்சாலையை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்’ என போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் செங்கம், பெரணமல்லூர் பகுதியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : parties ,Chenam ,Peranamallur ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...