குற்றாலத்தில் திருவள்ளுவர் தினம்

தென்காசி, ஜன. 18:    குற்றாலம்  வள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திமுக சார்பில் ஒன்றியச்  செயலாளர் ராமையா மாலை அணிவித்தார். இதில் பேரூர் செயலாளர்கள்  மேலகரம் சுடலை, இலஞ்சி முத்தையா, வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்  வேலுச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் நாகராஜ் சரவணார்,  முன்னாள் தொண்டர் அணி சோமசுந்தரம், நீலகண்டன், செல்லத்துரை, ஜேம்ஸ், சந்திரன்  பங்கேற்றனர்.  பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர்  இசக்கிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் மாநில துணைத்தலைவர் செங்கோட்டை  அய்யம்பெருமாள் பிள்ளை, செந்தில், சீதாராமன், மாவட்டத் தலைவர் குலாம், துணை  செயலாளர் சதீஷ், சங்கர், பச்சாத்திமாடன், இசக்கி, ராஜதுரை, ராஜ், பாரதி,  லட்சுமணன், ராம்குமார், ஆவுடையப்பன், ராமையா, கெய்சர், கோபால்,  அப்துல்ரசாக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: