சீதபற்பநல்லூர், சிறுக்கன்குறிச்சி, மாறாந்தையில் இன்று மின்தடை

நெல்லை, ஜன. 18: சீதபற்பநல்லூர், சிறுக்கன்குறிச்சி, மாறாந்தை, நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று (18ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (18ம் தேதி) நடக்கிறது. இதனால் சீதபற்பநல்லூர், புதூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். இத் தகவலை நெல்லை கிராமப்புற மின்வாரிய செயற்பொறியாளர் புலமாடன் தெரிவித்தார்.

Related Stories: