குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி 21ல் துவக்கம்

நெல்லை, ஜன. 18:  நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆன்டணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குருப் 1 முதல்நிலை எழுத்துத்தேர்வு மார்ச் 3ல் நடக்கிறது.விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். .இலவச பயிற்சி  வகுப்பு,நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21ம் தேதி முதல் (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து வேலைநாட்களிலும் நடக்கிறது.  முதல்நிலை எழுத்துத்தேர்வுக்கான இலவச பயிற்சி  வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

Related Stories: