நெல்லை, ஜன. 18: நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மதுவிற்ற 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,675 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொங்கல் விடுமுறையையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்க மாநகர கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் மாநகரத்தில் உள்ள 8 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட டாஸ்மாக் பார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மேலப்பாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 2500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.