பைக் விபத்தில் மாஜி எஸ்ஐ பலி

மானூர், ஜன. 18: மானூர் அருகே பைக் விபத்தில் முன்னாள் எஸ்ஐ பரிதாபமாக இறந்தார். நெல்லை-  சங்கரன்கோவில் சாலையில் சேதுராயன்புதூர் போலீஸ் காலனி  முன்  அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 17ம் தேதி மாலை   தேவர்குளத்தை சேர்ந்த மாஜி எஸ்ஐ சாமி (60),  அவரது மகன் விக்னேஸ் (27) ஆகியோர் தேவர்குளத்தில் இருந்து நெல்லைக்கு பைக்கில்  சென்றுகொண்டிருந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக சேதுராயன்புதூர்   போலீஸ் காலனி பகுதியில் வந்தபோது அங்குள்ள பேரிகார்டு  மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.   இதில் காயமடைந்த விக்னேஸ் நெல்லை அரசு மருத்துவமனையிலும், படுகாயமடைந்த சாமி திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதில்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சாமி  உயிரிழந்தார். விபத்து குறித்து  விக்னேஸ் கொடுத்த புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ செல்வராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: