திருப்பூர், ஜன.18: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிந்தனர். திருப்பூர் மாநகர் பகுதியில் பொழுது போக்க ஏற்ற இடம் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பூர் தொழிலாளர்கள் மாநகராட்சி பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்தனர். பூங்காவில் தூரி, சீசா, சறுக்கு பலகை, பறவைகள், ராட்டிணம், ரயில் உள்ளிட்ட விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பொங்கல் விடுமுறையால் அனைத்து பின்னலாடை நிறுவனங்கள், பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் மாநகராட்சி பூங்காவிற்கு வந்து பொழுதை கழித்தனர்.