லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர், ஜன.18: கடலூர் மாவட்டம், பெரியகங்கணாகுப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ஹரிஹரன் (19). இவர், கரடிவாவியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கரடிவாவியில் இருந்து செலக்கெரிச்சல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வந்த லாரி ஒன்று ஹரிஹரன் மீதி மோதியது. இதில், அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஹரிஹரன் உயிரிழந்தார்.

Related Stories: