திமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு

காங்கயம், ஜன.18:காங்கயம் அருகே, திமுக பிரமுகர் வீட்டில் திருடர்கள் புகுந்து வைர நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைத் திருடி சென்றனர்.

 கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் பவித்ரவள்ளி. இவரது வீடு காங்கயம் அருகே,  வரதப்பம்பாளையம் கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், பவித்ரவள்ளியும் அவரது கணவர் ஹரியும் வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல்கள், ரூ.10 ஆயிரம் பணம், ரூ.50 ஆயிரம் மதிப்பில் வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.தகவல் அறிந்து காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் மேற்கூறையை பிரித்து உள்ளே இறங்கி, திருட்டு நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே இவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த ரஞ்சித்(25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: