×

சந்தனகட்டை கடத்த முயன்ற 2 பேர் கைது

பாலக்காடு, ஜன.18:  பாலக்காடு அருகே சந்தனக்கட்டைகளை கடத்த  முயன்ற 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே சந்தனக்கட்டை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., ராஜேஷ் தலைமையில் போலீசார் முைளயங்காவு பகுதியில் நேற்று ேசாதனை மேற்கொண்டனர். அப்போது முைளயங்காவு தனியார் பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்து லாரிக்கு சிலர் சந்தன கட்டைகளை ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் சந்தன கட்டைகளை விட்டு அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர். இதில் 2 பேரை போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டாம்பி அருகே முைளயங்காவுப் பகுதியை சேர்ந்த ராஜன் (37), மப்பாட்டுக்கராவைச் சேர்ந்த முகமது(29), என்பதும் இவர்கள் சந்தனகட்ைடகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 1805 கிலோ  சந்தனக்கட்டை மீட்டனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்