×

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6.78 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு, ஜன.18: பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில்  ரூ.6.78 கோடிக்கு மது விற்பனையானது.பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 194 டாஸ்மாக் கடைகளிலும் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகின. இதில், நேற்று முன்தினம் (16ம்தேதி) திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 15ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இரு மடங்கு மதுபான விற்பனை நடந்தது. இதில், கடந்த 16ம் தேதி மட்டும் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 6 கோடியே 78 லட்சத்திற்கு பீர் மற்றும் இதர மதுபானங்கள் விற்பனையானது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pongal ,festival ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா