×

கார் மோதி முதியவர் பலி

ஈரோடு, ஜன.18: ஈரோட்டில் கார் மோதி முதியவர் பரிதாபமாக பலியானார். ஈரோடு கைகாலந்தோட்டம் பெரியண்ணா வீதியை சேர்ந்தவர் சதாசிவம்(75). இவர், நேற்று முன்தினம் இரவு ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் சிக்னல் பகுதியில் இருந்து அவரது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது, ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.  இந்த விபத்தில் சதாசிவம் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள், சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.  இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் சரவணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...