முத்துப்பேட்டை, ஜன.18:முத்துப்பேட்டை அருகே பின்னத்தூர் கிராமம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தங்கையன்(70). இந்நிலையில் தங்கையன் நேற்று காலை பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு முள்வேலிக்குள் கிடந்த காலி பாட்டில்களை கைவிட்டு எடுத்தபோது ஏற்கனவே மின் இணைப்பின் ஸ்டே கம்பி மூலம் வேலியில் பாய்ந்து இருந்த மின்சாரம் தங்கையனை தாக்கியது. இதில் அதே இடத்திலேயே தங்கையன் இறந்தார். முத்துப்பேட்டை போலீசார் தங்கையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.