திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஆட்டையாம்பட்டி, ஜன.18:  ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பளர் வீரபாண்டி ராஜா விழாவில் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து வேலநத்தம் கிராமத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆட்டையாம்பட்டி நகர செயலாளர் முருகபிரகாஷ் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொறுப்பளர் வீரபாண்டி ராஜா, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பசுமாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுக்கடை, சின்னமாரியம்மன் கோயில், நெசவாளர் காலனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Related Stories: