×

நாமக்கல்லில் ஆட்டுக்கறி கிலோ ₹540க்கு விற்பனை

நாமக்கல், ஜன.18:  தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16ம் தேதிகளில் அனைவரது வீடுகளிலும் சைவ உணவு சமைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். நேற்று காணும் பொங்கலையொட்டி வீடுகள்தோறும் அசைவ விருந்து கமகமத்தது. நாமக்கல்லில் அதிகாலை முதலே ஆடு, கோழி மற்றும் மீன் கடைகளில் அசைவப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ₹540 வரையிலும், நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ ₹460க்கும், பிராய்லர் கோழிக்கறி கிலோ ₹160க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதபோல், பல்வேறு மீன்களையும் கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். ரோகு, கட்லா வகை மீன் ஒரு கிலோ ₹130க்கும், வஞ்சிரம் கிலோ ₹650க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிலோ ₹160க்கு விற்பனை செய்யப்பட்ட பிராய்லர் வகை கோழிக்கறியையே விரும்பி வாங்கிச் சென்றனர்.

Tags : Namakkal ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்