×

பள்ளிபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பள்ளிபாளையம், ஜன.18:  பள்ளிபாளையம் அரசு பள்ளியில் 25 ஆண்டுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர். அப்போது, பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்தனர்.பள்ளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1993ல் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி படிப்பை முடிந்து வெளியேறிய இந்த மாணவர்களில் பலர், கல்லூரி முடித்து பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் படித்த பள்ளியில் பால்ய நண்பர்களை சந்திக்க பள்ளிபாளையம் வந்தனர். 110 மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர்கள் பாலாஜி, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள் பலரும், தாங்கள் படித்த வகுப்புகள், அமர்ந்த இடங்கள் ஆகியவற்றை நேரில் பார்த்து பரவசப்பட்டனர். மாணவர் பருவத்தில் செய்த குறும்புகள், தவறுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் ஒருநாள் பள்ளியில் ஒருங்கிணைந்து மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதென்றும், பள்ளியில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்வி பரிசுகளை வழங்குவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர், நண்பர்களுடன் விருந்துண்டு விடைபெற்றனர்.

Tags : Alumni meeting ,Pillapalayam Government School ,
× RELATED அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி