×

திருச்செங்கோடு வட்டாரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

திருச்செங்கோடு, ஜன.18:  தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா திருச்செங்கோடு வட்டாரத்தில் கொண்டாடப்பட்டது. குமரமங்கலம் நாடார் மேட்டில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு, திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மல்லசமுத்திரம் பகுதியில் ஏழு இடங்களில் கொடியேற்றி வைத்த பொன்.சரஸ்வதி, எம்ஜிஆர் படங்களுக்கு மாலை அணிவித்து விலையில்லா வேட்டி-சேலைகளை வழங்கினார். மேலும், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர், அண்ணா தொழிற்சங்க தலைவர் பழ.ராமலிங்கம், நில வள வங்கி தலைவர் கொட்டாங்காடு சக்திவேல், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, அணிமூர் மோகன், நாமக்கல் பால் வள ஒன்றிய உறுப்பினர் குழந்தைவேலு, மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் சுந்தரராஜன், டிசிஎம்எஸ் துணை தலைவர் ராணி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும்  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : MGR Birthday Celebration ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்