×

அன்னவாசல் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது

புதுக்கோட்டை, ஜன.18:   அன்னவாசல்  பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய  தகவல் வந்தது. இதன் பேரில் அன்னவாசல் போலீசார் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  சித்தன்னவாசல் குளத்துக்கரை பகுதியில் மது  விற்பனை செய்த சித்தன்னவாசலை சேர்ந்த பன்னீர்செல்வம், அன்னவாசல் அருகே  நெருஞ்சிக்குடி பஸ் நிறுத்தம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட  குடுமியான்மலையை சேர்ந்த அன்சாரி, வீரப்பட்டி  கடைவீதி பகுதியில் மது விற்ற ஆறுமுகம்  ஆகிய மூவரையும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : area ,Annavasal ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...