புதுக்கோட்டை, ஜன.18: புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பொங்கல்வைத்து வழிபட்டனர். இதன் பிறகு அனைருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.