×

வெண்ணந்தூர் அருகே பஸ்கள் வராத பேருந்து நிலையம்

ராசிபுரம், ஜன.18: வெண்ணந்தூர் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையார் கோயில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியில், வெள்ளைபிள்ளையார் கோயிலை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.இதனையடுத்து, கடந்த 2002-2003ம் ஆண்டு எம்பி நிதி ₹5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, கடைகள் கட்டப்பட்டன. பஸ்கள் நின்று செல்லும் வகையில் கான்கிரீட் தரைத்தளமும் அமைக்கப்பட்டது. ஆனால், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராமல் தார்சாலையில் நின்றபடி பயணிகளை ஏற்றி இறக்கி சென்று விடுகின்றன. இதனால், பஸ் ஸ்டாண்ட் இருந்தும், பயணிகள் சாலையோரம் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellandur ,
× RELATED வெண்ணந்தூர் அருகே கடும் வறட்சியால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்