அரியலூர், ஜன.18: வாரணவாசி சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியலூர் வாரணவாசி சமத்துவபுரத்தில் பொதுமக்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.