×

அரியலூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

அரியலூர், ஜன. 18: பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட இறகுப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. போட்டியை கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்தார். போட்டிகள் 15 வயதுக்க உட்பட்டோர், 40 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. போட்டிகளில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது. 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பிரணவ், சந்தோஷ் அணியும், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் உடையார்பாளையத்தை சேர்ந்த சுதாகர், சரவணன் அணியும், பொதுப்பிரிவுக்கான போட்டிகளில் அரியலூரை சேர்ந்த வெங்கடேஷ், செல்லபாண்டி இணையும் முதலிடம் பிடித்தது. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags : District level tournament ,Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...