×

மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

மயிலாடுதுறை, ஜன.18:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதன் தொடர்ச்சியாக மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிநாதர், செபஸ்தியார், மாதா, புனித வனத்து அந்தோணியார் மற்றும் புனித பதுவை அந்தோணியார் உள்ளிட்ட பொரூபங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரானது அருட் தந்தையர்களால் புனிதம் செய்யப்ப்டடு அலங்கார திருத்தேர் பவனியானது திருத்தலவளாகத்திலிருந்து கொண்டாரெட்டித்தெரு, மாரியம்மன்கோவில் தெரு அழகப்பட்ட செட்டித்தெரு, ஜவுளித்தெரு குருக்கள்பண்டாரத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் திருத்தல வளாகத்தை வந்தடைந்தது.  இதில ஜாதி, மத வேறுபாடின்றி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித அந்தோணியாரின் ஆசீர் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை புனித அந்தோணியார் திருத்தல பங்குதந்தை மரிய ஜோசப்ஜெரால்டு தலைமையில் பங்கு மன்றத்தினர், திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் பங்குமக்கள் இயேசுவின் கங்கள் இயக்கத்தினர் இருதய சகோதரர்கள் தூய இதய மரிய அன்னை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

Tags : Annamalai Annai Annai Annapathirai ,Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...