கடவூர், ஜன.18: தரகம்பட்டியில் தமிழர் பண்பாட்டுப் பேரவை மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு ஊர்கவுண்டர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஊர் நாட்டாமை பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் ராசு, பாஜ மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக துணைச்செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.பிடிஓ மனோகரன் போட்டிகளை துவக்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பால் கூட்டுறவு செயலாளர் முனியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாரியப்பன், வேதவள்ளி செல்வராஜ் மற்றும் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.