அரூர், ஜன.18: கம்பைநல்லூர் வட்டம் இருமத்தூரில் உள்ள ஐவிஎல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 100 பானைகளில் பொங்கல் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவை பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர் பழனி, துணை முதல்வர் ரகுபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.