×

அவதூறு கார்ட்டூன் வெளியிட்டதாக கைது அரவக்குறிச்சி தகவல் தொழில்நுட்ப அணி பிரமுகருடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு பதில் சொல்லும் காலம் வரும் என நன்னியூர் ராஜேந்திரன் ஆவேசம்

கரூர், ஜன. 18: முதல்வர் மற்றும் அமைச்சரை பற்றி அவதூறு கார்ட்டூன் வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட அரவக்குறிச்சி தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி பிரமுகரை திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். பின்னர் இதற்கு எல்லாம் பதில் சொல்லும் காலம் வரும் என நன்னியூர் ராேஜந்திரன் ஆவேசமாக கூறினார்.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் மீது சின்னதாராபுரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் சிறையில் இருக்கும் லோகநாதனை மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டத்துணை இணை செயலாளர் மணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் கூறியது:எடப்பாடி அரசின் அதிகாரப்போக்கின் உச்சமாக லோகநாதன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். ஊடக சுதந்திரத்தில் தொடர்ந்து தலையிட்டு கேலிக்கூத்தாக்கி வருவது கண்டிக்கத்தக்கது. ஆட்சி மாறும் காட்சி மாறும். திமுக தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன் இதற்கெல்லாம் பதில் சொல்லும் தேவை வரும். வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.

Tags : Nunniyur Rajendran ,executives meeting ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...