×

சிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்

சிங்கம்புணரி, ஜன.18: சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வறட்சியை சமாளிக்க பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பல இடங்களில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாததால், பல போர்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் பல ஊர்களில் உள்ள குடிநீர் தண்ணீர் தொட்டிகள் பயன்படாமல் காட்சி பொருளாக இருந்து வந்தது.
இந்த தண்ணீர் தொட்டிகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இதில் நாடார் வேங்கைப்பட்டி, குமரத்த குடிப்பட்டி, சதுர்வேதமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் சமுக விரோதிகளாள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய நிர்வாகம் செயல்படாமால் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா