56 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டி கோப்பையை கைப்பற்றியது மதுரை அணிகள்

திருப்பரங்குன்றம், ஜன.18: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர்நகரில் 56 அணிகள்பங்கேற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை மாவட்ட அணிகள் கோப்பையை கைப்பற்றின.திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர்நகரில் உள்ள ஆக்மி கால்பாந்தாட்ட கழகம் சார்பில் 25வது அண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கேரளா, கர்நாடக மாநில அணிகள் உட்பட 56 அணிகள்பங்குபெறும் தென் மாநில அணிகளுக்கு இடையேயான சூழல்கோப்பை கால்பந்தாட்ட போட்டி கடந்த ஜன.10ம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் கேராளாவில் மலப்புரம், திருவனந்தபுரம், ஆலுவா, வயநாடு ஆகிய நான்கு அணிகளும், கர்நாடகாவில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நான்கு அணிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 அணிகள் உட்பட மொத்தம் 56 அணிகள பங்கேற்றன.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களையும் மதுரை மாவட்ட அணிகள் கைப்பற்றின. முதல் பரிசை மதுரை அரசரடி கால்பந்தாட்ட கழகமும், இரண்டாம் பரிசை டிவிஎஸ் அணியும், மூன்றாம் பரிசை திருமங்கலம் விவேக் நினைவு கால்பந்தாட்ட அணியும், நான்காவது பரிசை ஆக்மி கால்பந்தாட்ட அணியும் கைப்பற்றின.

Related Stories: