×

மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவர் கைது

கமுதி, ஜன. 18: கமுதி அருகே அபிராமத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரகோசமங்கை அருகே மரியராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (37). இவர் கமுதி அருகே நந்திசேரியில் உள்ள புனித ஜோன்ஸ் நடுநிலைப்பள்ளியில் பள்ளி வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா (38). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு லதா காணாமல் போய்விட்டதாக அபிராமம் காவல் நிலையத்தில் மோசஸ் புகார் அளித்திருந்தார். லதா சேலத்தில் உள்ள அவரது நண்பர் பிரகாஷ் வீட்டிற்கு ெசன்று அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில் லதா வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெறுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இவருக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்காக அபிராமம் காவல் நிலையத்திற்கு லதாவும், அவரது நண்பர் பிரகாசும் நேற்று முன்தினம் வந்தனர். பின்னர் சேலத்திற்கு செல்வதற்கு அபிராமம் பஸ்நிலையம் அருகே இரவு 11 மணிக்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோசஸ் இரும்புக் கம்பியால் லதாவை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லதாவை பிரகாஷ் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லதா இறந்து விட்டார்.  பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து மோசஸை கைது
செய்தனர்.  

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை