மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை, ஜன.18: மூதாட்டியிடம் நகை பறித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை கோவலன்நகரை சேர்ந்தவர் மலைராணி(60). இவர் காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரே டூவீலரில் மூவர் வந்தனர். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த டூவீலரில் கடைசியாக அமர்ந்திருந்த வாலிபர், மலைராணி அணிந்திருந்த 3பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 3பேர்களையும் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:   மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் மாலா(48). இவரது தங்கை மகனை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சினிமா பார்க்க கிளம்பினார். சிறிது தூரம் சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். பின்னர் டூவீலரை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்னர்தான், தான் அணிந்திருந்த 4பவுன் நகையை காணவில்லை என மாலாவிற்கு தெரிந்தது. இது குறித்து தெற்குவாசல் போலீசில் மாலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: