மதுரை, ஜன.18: மூதாட்டியிடம் நகை பறித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கோவலன்நகரை சேர்ந்தவர் மலைராணி(60). இவர் காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரே டூவீலரில் மூவர் வந்தனர். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த டூவீலரில் கடைசியாக அமர்ந்திருந்த வாலிபர், மலைராணி அணிந்திருந்த 3பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 3பேர்களையும் தேடி வருகின்றனர்.