வாழைப்பழம் சூறைவிடும் வினோத விழா திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியில் நாளை மின்தடை

திண்டுக்கல், ஜன. 18: திண்டுக்கல் அங்குநகர் துணைமின்நிலையத்தில் நாளை (ஜன.19, சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே காலை 9 முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் நகர், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று திண்டுக்கல் மேற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.  இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: