முன்விரோத மோதல் 8 பேர் மீது எப்ஐஆர்

குஜிலியம்பாறை, ஜன. 18: குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் அருள்முருகன் (36). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்க்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அருள்முருகன், அவரது தரப்பை சேர்ந்த ராமாயி, மனோன்மணி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது, செல்வராஜ் தரப்பில் நகுல்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த அருள்முருகன் அளித்த புகாரிபேரில் நகுல்சாமி, செல்வராஜ், சுரேஷ், மணிவேல் ஆகியோர் மீதும், நகுல்சாமி அளித்த புகாரின்பேரில் அருள்முருகன், பாரத், சிவக்குமார், ராமாயி ஆகியோர் மீதும் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: