செம்பட்டி, ஜன. 18: சின்னாளபட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மனைவி ஜோதிமணி (45). வீட்டருகே பண்ணை அமைத்து நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் விஷம் கலந்த கம்புவை வீட்டருகே மர்மநபர்கள் வீசியுள்ளனர். இதனை தின்று 20க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. இதுகுறித்து ஜோதிமணி அளித்த புகாரின்பேரில் சின்னாளபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.