பக்தர் மாயம்

செம்பட்டி, ஜன. 18: மதுரை மேட்டுத்தெருவை சேர்ந்த நாகஜோதி மகன் சுரேஷ்குமார் (32). காது கேட்காது, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது அம்மா, பாட்டி கனகவள்ளி ஆகியோருடன் பழநிக்கு கடந்த 3 நாட்களுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். செம்பட்டி- மதுரை ரோடு காமுபிள்ளைசத்திரம் அருகே வந்தபோது சுரேஷ்குமாரை திடீரென காணவில்லை. பழநி வரை சென்று பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: